ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் போன்ற பெரு நிறுவனங்களுடன் போட்டியிடும் பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் 84 நாட்களுக்கு அன்லிமிடெட் டேட்டா மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் நன்மைகளை வழங்கும் திட்டமொன்று இருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்களா?
அரசாங்கத்திற்கு சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனமானது 4ஜி ஸ்பெக்ட்ரம் எனும் வியாபார வளர்ச்சிக்கான பேருந்தைத் தவறவிட்டிருக்கலாம், ஆனால் தனது நெட்வொர்க்கில் அதிக சந்தாதாரர்களை சேர்ப்பதற்கு ஒருபோதும் தவறவில்லை.
ஏனெனில் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் மற்றும் வோடாபோன் ஐடியா போன்ற பெருநிறுவனங்களையும், நிதி நெருக்கடிகளையும் சமாளிப்பதற்கு தன்னால் ஆன அனைத்தையும் செய்ய வேண்டிய கட்டாயத்தில் பிஎஸ்என்எல் உள்ளது. அதை சரியாக செய்து வருகிறது என்றே கூறலாம்.