யாரும் பெண் தராததால் சிறுமியை திருமணம் செய்து கொண்ட 37 வயது நபர்..! நாமக்கல்லில் பரபரப்பு...

பெற்றோரிடம் ஆசை வார்த்தைகளை கூறி சிறுமியை அவசர அவசரமாக திருமணம் செய்த பெட்ரோல் பங்க் ஊழியரை போலீசார் கைது செய்துள்ளனர்.


வயது காரணமாக ஊரில் யாரும் பெண் தராமல் இருந்ததால் 17 வயது சிறுமிக்கு தாலி கட்டி மனைவியாக்க முயன்ற நாமக்கல் நபரின் குடும்பத்தை கூண்டோடு கைது செய்துள்ளது காவல்துறை.


தமிழ்நாட்டில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக குற்றம் இழைக்கப்படாமல் இருக்க காவல்துறை கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக சிறார் ஆபாச படங்களை பாத்தாலோ, பகிர்ந்தாலோ, பதிவிறக்கம் செய்தாலோ போக்சோ சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என டிஜிபி ரவி தெரிவித்துள்ளார்.

அந்த குற்றத்தில் முதல் ஆளாக திருச்சியை சேர்ந்த கிறிஸ்டோபர் அல்போன்ஸ்ராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் சிறார் ஆபாச படங்களை பார்த்து பகிர்ந்து வந்ததாக தமிழகத்தில் 40 பேர் பட்டியலை மத்திய அரசு போலீசாரிடம் அளித்துள்ளது. அவர்களை பிடிக்கும் நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டுள்ளனர்.